கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Sunday, May 31, 2009

black hole..?!?!

இரண்டு நண்பர்கள் நடந்து வரும் பாதையில் ஒரு பெரிய குழி இருந்ததாம்,
அதோட ஆழம் என்னன்னு தெரிஞ்சிக்க ரெண்டு பேருகிட்டயும் ஆசையாம்..(சென்னை பசங்க போலிருக்கு!!),,முதல்ல ஒருத்தன் ஒரு நீளமான குச்சிய எடுத்து விட்டு பாத்தா...ஒன்னும் தட்டுப்படவே இல்லையாம்! சரின்னு சொல்லிட்டு இன்னொருத்தன் ஒரு சின்ன கல்ல எடுத்து உள்ள போட்டானாம்...எந்த சத்தமும் திரும்பி வரலையாம்!! இந்த முறை அத விட கொஞ்சம் பெரிய கல்ல எடுத்து போட்டு பார்த்தா...இப்பவும் எந்த சத்தமும் திரும்பி வரலையாம்...இது என்னடா வித்தியாசமா இருக்கேன்னு குழம்பி போயி(ஒருவேள black hole இதுதானோ..!!)
இந்த வாட்டி மிஸ் ஆகாதுடா மச்சான்னு அங்க இருக்கிறதிலேயே பெரிய கல்ல பார்த்து ஒன்ன தூக்கி உள்ள போட்டாங்களாம்....இந்த வாட்டியும் எந்த சத்தமும் வரலையாம்...இன்னக்கி இத கண்டுபிடிக்காம போறதில்லைன்னு அங்கேயே யோசிச்சிகிட்டு நின்னதூரத்திலேர்ந்து ஒரு கருப்பு ஆடு குடு குடுன்னு ஓடி வந்து ஒரே ஜம்ப்ள அந்த குழிக்குள்ள குதிச்சிடிச்சாம் ......இவங்களுக்கு ஒரே ஆச்சரியம்...என்னடா மச்சி எதுக்கு இந்த ஆடு உள்ள குதிச்சிச்சு,இந்த குழிக்குள்ள அப்படி என்னதான் இருக்கு அப்படின்னு !! அந்த நேரத்துல ஒரு விவசாயி அந்த பக்கமா எதையோ தேடிகிட்டு வந்தானாம்..என்னங்க என்ன தேடுறீங்க- இது அந்த ரெண்டு பேர்ல ஒருத்தன்..

ஒண்ணுமில்லீங்க என்னோட ஆட்ட காணும் அத தான் தேடிகிட்டு இருக்கேன் -இது விவசாயி,

இப்பதாங்க ஒரே ஓட்டமா ஓடி வந்து இந்த
குழிக்குள்ள விழுந்தது அதத்தான் நாங்க யோசிச்சிகிட்டு இருக்கோம்...

உடனே விவசாயி: அப்படியெல்லாம் இருக்காதே அத நான் ஒரு பெரிய கல்லுலல்ல கட்டி வச்சிருந்தேன்....

நண்பர்கள்: ?!?!?!?!?!!?

No comments:

Post a Comment