கவனிக்க..
கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

தேடிச் சோறு நிதந்தின்று -பல
சின்னஞ்ச் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !
- மகாகவி பாரதியார்

(அறத்துப்பால் - இல்லறவியல் - புகழ் -எண் : 236 )
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
(மு.வரதராசனார் : ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.)

(பொருட்பால் - படையியல் - படைசெருக்கு - எண் : 772)கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.(சாலமன் பாப்பையா :காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.)

வாரண மாயிரம் சூழ வலம்வந்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக்கணாக் கண்டேன் தோழீ நான்
- ஆண்டாள்

இருப்பதுபொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே !
ஒருத்தருக்கும் தீங்கினை யுன்னாதே -
பருத்ததொந்திநம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகுதம்மதென்று தாமிருக்கும் தான் !
- பட்டினத்தார்
இளைஞனுக்குநாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் தேடி
நலமொன்னும் இல்லாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல்
பொலபொலவெனக் கலகலவெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக்கொண்டு
ஆப்பதனை அசைதிட்ட குரங்கதனை போல
அகபட்டீர் கடந்துழல
அகபட்டீர் நீரே
- பட்டினத்தார்