இரண்டு நண்பர்கள் நடந்து வரும் பாதையில் ஒரு பெரிய குழி இருந்ததாம்,
அதோட ஆழம் என்னன்னு தெரிஞ்சிக்க ரெண்டு பேருகிட்டயும் ஆசையாம்..(சென்னை பசங்க போலிருக்கு!!),,முதல்ல ஒருத்தன் ஒரு நீளமான குச்சிய எடுத்து விட்டு பாத்தா...ஒன்னும் தட்டுப்படவே இல்லையாம்! சரின்னு சொல்லிட்டு இன்னொருத்தன் ஒரு சின்ன கல்ல எடுத்து உள்ள போட்டானாம்...எந்த சத்தமும் திரும்பி வரலையாம்!! இந்த முறை அத விட கொஞ்சம் பெரிய கல்ல எடுத்து போட்டு பார்த்தா...இப்பவும் எந்த சத்தமும் திரும்பி வரலையாம்...இது என்னடா வித்தியாசமா இருக்கேன்னு குழம்பி போயி(ஒருவேள black hole இதுதானோ..!!)
இந்த வாட்டி மிஸ் ஆகாதுடா மச்சான்னு அங்க இருக்கிறதிலேயே பெரிய கல்ல பார்த்து ஒன்ன தூக்கி உள்ள போட்டாங்களாம்....இந்த வாட்டியும் எந்த சத்தமும் வரலையாம்...இன்னக்கி இத கண்டுபிடிக்காம போறதில்லைன்னு அங்கேயே யோசிச்சிகிட்டு நின்னதூரத்திலேர்ந்து ஒரு கருப்பு ஆடு குடு குடுன்னு ஓடி வந்து ஒரே ஜம்ப்ள அந்த குழிக்குள்ள குதிச்சிடிச்சாம் ......இவங்களுக்கு ஒரே ஆச்சரியம்...என்னடா மச்சி எதுக்கு இந்த ஆடு உள்ள குதிச்சிச்சு,இந்த குழிக்குள்ள அப்படி என்னதான் இருக்கு அப்படின்னு !! அந்த நேரத்துல ஒரு விவசாயி அந்த பக்கமா எதையோ தேடிகிட்டு வந்தானாம்..என்னங்க என்ன தேடுறீங்க- இது அந்த ரெண்டு பேர்ல ஒருத்தன்..
ஒண்ணுமில்லீங்க என்னோட ஆட்ட காணும் அத தான் தேடிகிட்டு இருக்கேன் -இது விவசாயி,
இப்பதாங்க ஒரே ஓட்டமா ஓடி வந்து இந்த
குழிக்குள்ள விழுந்தது அதத்தான் நாங்க யோசிச்சிகிட்டு இருக்கோம்...
உடனே விவசாயி: அப்படியெல்லாம் இருக்காதே அத நான் ஒரு பெரிய கல்லுலல்ல கட்டி வச்சிருந்தேன்....
நண்பர்கள்: ?!?!?!?!?!!?
கவனிக்க..
கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!
Sunday, May 31, 2009
நச்சின்னு நாலு வரி....
'சிட்டி' சென்
நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்லை
முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சுத் திணறியதில்லை
கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்னதில்லை
அடுக்குபானை
அரிசி திருடி
ஆற்றுச் சோறு ஆக்கியதில்லை
ஆனாலும் சொல்கிறாய்
ஐயாம் லிவிங் என்று...
-தாயம்மா
பாதசாரிகள் கவனத்திற்கு
கடந்து போகும்
ஜோடி கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிகலைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே....!
- வனவை தூரிகா
கவனம்
நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி...
-சே. சதாசிவம்
bakthi
நவகிரங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிகொண்டிருக்கிறது மனசு.
எதை வேண்டி
எதை பெறுவது...?
-மாசிலா விநாயகமூர்த்தி
குழந்தை
மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு !
- பி.பழனிசாமி
நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்லை
முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சுத் திணறியதில்லை
கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்னதில்லை
அடுக்குபானை
அரிசி திருடி
ஆற்றுச் சோறு ஆக்கியதில்லை
ஆனாலும் சொல்கிறாய்
ஐயாம் லிவிங் என்று...
-தாயம்மா
பாதசாரிகள் கவனத்திற்கு
கடந்து போகும்
ஜோடி கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிகலைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே....!
- வனவை தூரிகா
கவனம்
நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி...
-சே. சதாசிவம்
bakthi
நவகிரங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிகொண்டிருக்கிறது மனசு.
எதை வேண்டி
எதை பெறுவது...?
-மாசிலா விநாயகமூர்த்தி
குழந்தை
மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு !
- பி.பழனிசாமி
தனிமை..
கதை சுருக்கம் - வாழ்கையில் முதல் முறையாக தலைநகரை (அதாங்க டெல்லி !) சுற்றி பார்க்க போகிறோம் என்று மனதில் கோட்டை கட்டிக்கொண்டு எதோ ஒரு வண்டியில் (hyndai..) ஏறி பாதி தூரம் போனால், வண்டி ரிப்பேர்!!!! அடுத்த கார் வர இரண்டு மணி நேரம் ஆனதால் டெல்லியை ஒரே இடத்தில் நின்று போன காருக்குலேயே சுத்தி சுத்தி பார்த்தோம்...அட போங்கடா என்று 'வெறுப்பில்' என் friend கார் உள்ளேயே தூங்கி விட்டான்....அப்போது கிளிக்கியது ....
Friday, May 29, 2009
மறந்து விடாதீர்கள்....
இதையும் சகித்து கொண்டு வாழ்வதால் தான் சில சமயம் நாம் இந்தியன் என்று நினைக்கும் பொழுது கேவலமாக இருக்கிறது.....
Labels:photography,paintings
கொஞ்சம் சீரியஸ்...
டூன்ஸ்..........
நிலம்..climate..மக்கள்..இன்னும் ஏராளம்... அனைத்திலும் இரண்டு extremes..உள்ள நாடு நமது நாடத்தான் இருக்கும்...!!!
தொடர்ந்து ஆறு முறை தொடர்ச்சியாக ஒலிம்பிக்ஸில் தங்கம் வாங்கிய ஒரே நாட்டின் நிலைமை.....!!!!
(கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொருவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியாது என்பதற்காகத்தான் இன்னமும் அது ஒலிம்பிக்கில் சேர்க்க படவில்லை....உண்மையிலேய அது முட்டாள்கள் விளையாடும் விளையாட்டுதான்....படித்தவர்களாவது விழித்து கொள்ளுங்கள் ....!!)
(கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொருவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியாது என்பதற்காகத்தான் இன்னமும் அது ஒலிம்பிக்கில் சேர்க்க படவில்லை....உண்மையிலேய அது முட்டாள்கள் விளையாடும் விளையாட்டுதான்....படித்தவர்களாவது விழித்து கொள்ளுங்கள் ....!!)
Labels:photography,paintings
கொஞ்சம் சீரியஸ்...
Wednesday, May 27, 2009
கேரக்டர்ஸ்...
பெயர்:shailan parkar(கண்ணாடி அணிந்திருப்பவர்...)..specialized in கமர்ஷியல் food photography...ஒரு studio lectureஇன் போது...http://www.shailanparker.com/
(well experienced and very nice person...)
prof.anupam pal (biological science), serious photographer...நான் எடுக்கும் போட்டோவுக்கு கமெண்ட் கொடுத்து செதுக்குபவர்....iit kanpur பொன்விழா stamp வெளியீட்டிற்கு இவர் எடுத்த படம் select ஆகி இருக்கிறது...http://www.palphotos.com/ photographyஇல் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தளம்..
டீ விற்கும் சிறுவன்..(see glimpse in his eyes..)
பொதுவாகவே போஸ் கொடுக்க பிரியபடுகிறார்கள் மலைவாழ் மக்கள்...லைக் திஸ் ஒன்..
நம்ம ஊர் அனுமான் வேஷம் மாதிரி இது ஹிமாச்சல் பகுதியில்..
Subscribe to:
Comments (Atom)


