'சிட்டி' சென்
நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்லை
முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சுத் திணறியதில்லை
கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்னதில்லை
அடுக்குபானை
அரிசி திருடி
ஆற்றுச் சோறு ஆக்கியதில்லை
ஆனாலும் சொல்கிறாய்
ஐயாம் லிவிங் என்று...
-தாயம்மா
பாதசாரிகள் கவனத்திற்கு
கடந்து போகும்
ஜோடி கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிகலைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே....!
- வனவை தூரிகா
கவனம்
நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி...
-சே. சதாசிவம்
bakthi
நவகிரங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிகொண்டிருக்கிறது மனசு.
எதை வேண்டி
எதை பெறுவது...?
-மாசிலா விநாயகமூர்த்தி
குழந்தை
மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு !
- பி.பழனிசாமி
கவனிக்க..
கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!
Sunday, May 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment