கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Tuesday, June 23, 2009

பால ஞானம்



இத்துனூண்டு சைக்கிள்
பெரீய்ய பொம்மை
கத்திரிப்பூ நிற கவுன்
மொழுக்கென்று இருக்கும் பழங்கள்
கண்ணும் மனசும் விரிய விரிய கண்டதையெல்லாம்
களிபொங்க சொன்னால் செல்லமகள்
திரும்பும் வழிநெடுகிலும் வீடடைந்த பின்னும்

கைதேர்ந்த வேசியைப்போல் சிங்காரிதிருக்கும்
இக்கடைவீதியின் பண்டங்கள்
பார்த்துக்கொள்ள மட்டுமே தமக்கென்று
இயல்பிலேயே தெரிந்திருக்கிறது இல்லாதவன்
பிள்ளைக்கு....!!

No comments:

Post a Comment