கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Tuesday, June 23, 2009

செல்வி



குங்கும போட்டு பட்டாடை சகிதம்
கழுதையும் கழுதையும்
கலங்கிபோய் நின்றிருந்தன....

பூமாலையைப் பிய்த்து தின்ற குரங்குக்கும்
வாய்ப்பூன் போடப்பட்ட நரிக்கும்
அட்சதை போட அமைச்சர் வந்திருந்தார்!

பூணூலை உருவிவிட்டுக் கொண்டு
ஒற்றை விரல் கொட்டும் ஐயரின் முன்னால்
மஞ்சள் குளித்த ஓணானும்
காலில் கயிறு கட்டிய தவளையும்...

மழை வேண்டி நடந்த
திருமணங்களின் தொகுப்பைத்
தொலைகாட்சியில் பார்த்தபடி
செல்வி தனலட்சுமி, வயது முப்பத்தாறு!!
- தாமரை

No comments:

Post a Comment