கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Thursday, January 20, 2011

புலம் பெயர்ந்த வாழ்க்கை



பாபா,
உன் ஆடுகளை விற்றுத்தான்
நீ என்னைப் பார்க்க வர முடியும்
என்ற தொலைதூரத்தில்
என்னைக் கட்டிகொடுக்காதே.
எண்ணங்களை விட கார்கள்
வேகமாகப் பறக்கும் இடத்தில்
உயர் கட்டடங்களும்
பெரிய கடைகளும்
உள்ள இடத்தில் வேண்டாம்.
நீ காலையில் வந்து
அஸ்தமன நேரத்தில் நடந்தே
தீரக்கூடிய இடத்தில்
எனக்குத்
திருமணம் செய்து வை.
இங்கே நான்
ஆற்றங்கரையில் அழுதால்
அக்கரையில் உன் காதில் பட்டு
நீ வர வேண்டும்!...
- நிர்மலா புதின்

1 comment:

  1. நல்ல கருத்துள்ள கவிதை வாழ்த்துக்கள்...

    ReplyDelete